ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரத்தில் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை பாய வாய்ப்பு..

author img

By

Published : Sep 6, 2022, 7:10 AM IST

Etv Bharat

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சிறப்பு மருத்துவ குழுவினர் குற்ற வழக்கு தொடர்புதுறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது‌.

தொடர்ந்து மருத்துவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான சிறப்பு குழுவின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குநர் சம்பத்குமாரிடம் (செப்.5) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் மீது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும் இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக மருத்துவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம்? - கேள்வி எழுப்பிய தலைமை வழக்கறிஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.