உயிருக்கு ஆபத்தான நிலையில் காதல் மனைவி - மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.-யிடம் புகாரளித்த கணவன்

author img

By

Published : Oct 13, 2021, 3:52 PM IST

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

ஈரோட்டில் கணவன் கண் முன்னே காதல் மனைவியை இழுத்துச் சென்ற அவரது பெற்றோர் குறித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மனைவியை மீட்டுத் தரக்கோரியும் காதல் கணவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு: கவுந்தப்பாடி சலங்கை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், செல்வன். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரும் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகள் இளமதியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனை மீறி இருவரும் திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி புகார்

பின்னர், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். இவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த இளமதியின் பெற்றோர் அடியாள்களுடன் வந்து செல்வனைத் தாக்கிவிட்டு, இளமதியை இழுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, செல்வன் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், முறையான விசாரணை நடைபெறவில்லை. மேலும், அதிமுக அமைச்சரின் தலையீட்டால் வழக்கு ஏதும் பதியவில்லை.

காதல் தம்பதி
காதல் தம்பதி

இந்நிலையில், இளமதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆணவக்கொலை செய்யக்கூடிய நிலையில் தான் இருப்பதாகவும் வாட்ஸ்அப் மூலம் செல்வனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக செல்வன் இது குறித்து காவல் கண்காணிப்பாளரிடம் எடுத்துரைத்தார். மேலும், தனது மனைவியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இன்றி அவரை மீட்டுத் தர வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

அவரது கோரிக்கையை ஏற்ற காவல் துறையினர், விரைவில் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த பெண்ணைத் தூக்கிய பெற்றோர் - சினிமா காட்சிகளை மிஞ்சும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.