ETV Bharat / city

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு: விவசாயி கைது!

author img

By

Published : Apr 18, 2022, 2:26 PM IST

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு
மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

கோயம்புத்தூரில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மனோகரன் என்ற விவசாயியை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

கோயம்புத்தூர்: துடியலூரை அடுத்த வரப்பாளையத்தில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி 15 வயதான ஆண் காட்டு யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக விவசாயி மனோகரன், அவரது மகன் நரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், வனத் துறையினர் அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று(ஏப். 18) தலைமறைவாக இருந்த விவசாயி மனோகரனை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

விவசாயி மனோகர்
விவசாயி மனோகர்

கர்நாடகாவில் இருந்து பன்னிமடை வந்த அவரை கோயம்புத்தூர் வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத் துறையினர் இன்று காலை கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை வனத் துறையினர் தேடிவருகின்றனர்.

இதனிடையே கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியக வளாகத்தில் இன்று காட்டு யானைகள் பிரச்சினை தொடர்பாக விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் தற்போது விவசாயி மனோகரன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'சிவகங்கை வடமாடு மஞ்சுவிரட்டு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.