ETV Bharat / city

'மின் இணைப்பு ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தொடரும்'

author img

By

Published : Feb 26, 2022, 3:13 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

ஒரு விவசாயிக்கு பல இடங்களில் நிலங்கள் இருந்தாலும், அவர்களுக்கு மின் இணைப்பு ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் செந்தில்பாலாஜி கோவையில் நேர்காணல் செய்தார். அப்போது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்த செந்தில்பாலாஜி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் 96 விழுக்காடு வெற்றியைப் பெற்றுள்ளோம். இது முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி அடிப்படை வசதிகள் ஏதும் அதிமுக ஆட்சியில் செய்யவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இன்று (பிப்ரவரி 26) உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தயாரிக்கக் கூறியுள்ளோம்.

அடுத்த ஐந்தாண்டுக்கான பணிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுகின்றது. இதுபோன்ற பட்டியலைத் தயார்செய்து, சிறப்பு நிதி பெற்று மாவட்டம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு வரப்பட்ட நிதி வகை மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் அடிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. கோவையில் வித்தியாசம் பார்க்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துப் பணிகளும் செய்து கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.

ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை கொண்டுவர திட்டமா?

இதில் நல்ல தீர்ப்பு வரும், சூயெஷ் நிறுவனம் குடிநீர் வழங்க மேற்கொள்ளும் பணிகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேயர் பதவி கேட்பவர்கள் கடிதம் கொடுத்துவருகின்றனர்.

கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் சொல்லவில்லை, சில அதிமுகவினர் மட்டுமே சொல்கின்றனர். கோவை இனி தளபதியின் கோட்டை இனிவரும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் அதை உணர்த்துவார்கள் எனக் கூறினார்.

மின் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை கொண்டுவரத் திட்டமா என்ற கேள்விக்கு கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள், விநியோகத் திட்டங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

திமுக அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான மின் தேவையைக் கணக்கிட்டு உற்பத்திக்குத் தேவையான பணிகளைச் செய்துவருகிறது. மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. ஆதார் இணைப்பு உள்பட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மின்வாரியத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

216 துணைமின் நிலையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும், ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8,905 மின்மாற்றிகள் அமைக்கும் பணி அடுத்த 15 நாள்களில் நடைபெறும் மின்சார வாரியத்தைப் பொறுத்து உடனடியாக இணைப்பு வழங்கப்படுகிறது.

ஒரு விவசாயிக்கு 3, 4 இடங்களில் நிலங்கள் இருந்தாலும், அவர்களுக்கு மின் இணைப்பு ஏற்கனவே இருக்கும் நடைமுறையின்படி தொடரும் மின்வாரியத்தின் பணிகள் பார்த்து நிறைய விவசாயிகள் அதிர்ச்சியாகியிருக்கின்றனர்.

இலவச மின் இணைப்பு வராது என விவசாயிகள் இருந்த நிலையில் இப்போது அவர்களுக்கு இலவச இணைப்பு கொடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒடிசா முன்னாள் முதலமைச்சர் மறைவு - வெங்கய்யா நாயுடு இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.