ETV Bharat / city

விவசாயிகளை ஏமாற்றிய அதிமுக - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 8, 2021, 10:14 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளை ஏமாற்றுவதற்காக மும்முனை மின்சாரம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் அதிமுக கொடுத்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகேயுள்ள பேரூராட்சிகளில் ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, ஜமீன் ஊத்துக்குளி, வால்பாறை நகராட்சி, சோலையார் அணை, முடீஸ் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது,

இதில் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் பிரச்சினை குறித்து மனுக்கள் அளித்தனர். பின் அமைச்சர் கூறுகையில், “கோவையில் 100 வார்டுகளில் மனுக்கள் பெறப்பட்டு துறைசார்ந்த அலுவலர்களால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

கடந்த ஆட்சியில் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்படாததால் தற்போது மக்கள் சபை கூட்டம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் துறைசார்ந்த அலுவலர்கள் நேரில் சென்று தடையில்லா மின்சாரம் வழங்கவிரைவில் தீர்வு காணப்படும்.

விவசாயிகளை ஏமாற்றிய அதிமுக

முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து பருவமழை காலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையும், மின்சாரத் துறை உயர் அலுவலர்கள் மூலம், பாதிக்கப்படும் பகுதிகளில் விரைந்து செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

தற்போது ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் துணை மின்நிலையங்கள் 216 அமைக்கப்படவுள்ளது. கடந்த ஆட்சியில், தேர்தல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவை தேர்தலில் விவசாயிகளை ஏமாற்றுவதற்காகத் தான்” என்றார்.

இதையும் படிங்க: கனமழை: மீண்டும் ஊர் திரும்பத்தேவையான பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.