ETV Bharat / city

காதலை பிரித்த கோபம்.. 15 வயது மாணவிக்கு இளம்பெண் செய்த கொடுமை...

author img

By

Published : Apr 20, 2022, 10:32 AM IST

erode-woman-arrested-for-spreading-slander-on-social-media
erode-woman-arrested-for-spreading-slander-on-social-media

திருமணத்தை மீறிய உறவை பிரித்த கோபத்தில் காதலனின் மனைவி, மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஆபாசமாக வார்த்தைகளால் அவதூறு பரப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (28). அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த திருமணமான 40 வயது நபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த உறவு குறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், அந்த நபர் உமாரஞ்சினியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உமா ரஞ்சினி, அந்த நபரின் மனைவி, 15 வயது மகள் குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு, ஆபாச வார்த்தைகளில் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதனால், அந்த நபரின் மனைவி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், உமா ரஞ்சினி கைது செய்யப்பட்டார். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 67a, 67bஇன் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவன் - மனைவியை கொலை - குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.