ETV Bharat / city

Coimbatore Police Transferred: சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர்கள் பணியிட மாற்றம்

author img

By

Published : Dec 28, 2021, 6:32 PM IST

Coimbatore police transferred for bribe  coimbatore police ask bribe through google pay  Aaanaikatti tribe women complaints  சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர்கள்  ஆனைக்கட்டி ஆதிவாசி பெண்களின் புகார்  காவலர்கள் பணியிட மாற்றம்
Coimbatore Police Transferred

Coimbatore Police Transferred:கோயம்புத்தூர் சோதனைச் சாவடியில் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதற்காக காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்:Coimbatore Police Transferred:கோவை ஆனைக்கட்டி சாலை மாங்கரை சோதனைச் சாவடியின் வழியாகக் கோவையில் கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆனைக்கட்டியில் ஆதிவாசிப் பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகாசனப் பாய் தயாரித்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குத் தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசனப் பாயின் ஓரப்பகுதியை தைப்பதற்குச் சின்ன தடாகத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற டெய்லரிடம் கொடுத்திருந்தனர்.

நேற்று ஐயப்பன் யோகாசனப் பாயை பைக்கில் எடுத்துச்சென்றபோது சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர்கள் ஐயப்பனைத் தடுத்து நிறுத்தி, யோகாசனப் பாயின் பில் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். ஆனால், அவர் பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவல் துறையினர் ரூ. 1500 மதிப்பிலான யோகாசன பாயை எடுத்து வைத்துக் கொண்டு ஐயப்பனை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆதிவாசிப் பெண்களின் புகார்

இதுகுறித்து ஆதிவாசிப் பெண்கள் வாழ்வாதார மைய நிர்வாகி சௌந்தர ராஜன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் இது குறித்து விசாரணை நடத்த பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி ராஜபாண்டியனிடம் கூறியுள்ளார்.

விசாரணையில் சோதனைச்சாவடியில் பணியிலிருந்த துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு முத்துசாமி என்பவர் பாயைப் பறித்து வைத்தது தெரியவந்தது.

மேலும் அங்கு பணியிலிருந்த பட்டாலியன் காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்று வந்தது தெரியவந்தது.

பணியிட மாற்றம்

இதனையடுத்து பாயைப் பறித்த ஏட்டு முத்துசாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் இருவரையும் பட்டாலியனுக்கு மாற்றிக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.