கோவையில் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு

author img

By

Published : May 13, 2022, 12:21 PM IST

சிசிடிவி காட்சி

நல்லாம்பாளையம் பகுதியில் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர்: நல்லாம்பாளையம் பகுதியில் கல்பனா டிரேடர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் கணேஷ் குமார் அவரது இருசக்கர வாகனத்தை நிறுவனத்தின் வாயிலில் நேற்று (மே.12) நிறுத்தியுள்ளார்.

பின்னர் அவரது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றார். தனது இருசக்கர வாகனம் செல்லும் சத்தம் கேட்டு கணேஷ் குமார் வெளியே வந்தார். உடனே ஓடிச் சென்று அடையாளம் தெரியாத நபரை கணேஷ் குமார் மடக்கி பிடித்ததாக தெரிகிறது.

சிசிடிவி காட்சி

கணேஷ் குமாரின் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அடையாளம் தெரியாத நபர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கோவையில் வடமாநில லாரி ஓட்டுநர்கள் ஹூக்கா புகைக்கும் வீடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.