ETV Bharat / city

கோவையில் இளம்பெண் மீது திராவகம் வீச்சு

author img

By

Published : Jan 7, 2022, 1:57 PM IST

acid attack on coimbatore woman
கோவை பந்தய சாலை காவல் நிலையம்

கோயம்புத்தூரில் இளம்பெண் மீது திராவகம் வீசிய நபரை காவலர்கள் தேடிவருகின்றனர்.

கோயம்புத்தூர்: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதா என்பவர், கோயம்புத்தூரில் கட்டட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜன.6) மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய ராதா மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ராதா படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர், மூன்று தனிப்படை அமைத்து திராவகம் (ஆசிட்) வீசிய நபரை தேடி வருகின்றனர்.

ராதாவிற்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துவிட்டது - அமைச்சர் சக்கரபாணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.