ETV Bharat / city

ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் துளிகளுடன் சசிகலா மரியாதை

author img

By

Published : Oct 16, 2021, 12:31 PM IST

VK Sasikala, tribute at Jayalalitha, Marina Beach in Chennai, Jayalalitha memorial, ஜெயலலிதா நினைவிடம், சசிகலா, வி கே சசிகலா
சசிகலா ஜெயலலிதா

நாளை (அக். 17) அஇஅதிமுக தோன்றி 50ஆவது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. இதனையொட்டி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அவரது தோழியான சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

சென்னை: மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில், வி.கே. சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.இ.அ.தி.மு.க. நாளை (அக். 17) 50ஆவது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. இந்நிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.