ETV Bharat / city

காவி உடையில் திருவள்ளுவர்: திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம் - வைரமுத்து ட்வீட்

author img

By

Published : Feb 20, 2021, 10:12 PM IST

Updated : Feb 21, 2021, 8:45 AM IST

Vairamuthu tweet
Vairamuthu tweet

திருவள்ளுவருக்கு வர்ண அடையாளம் பூசுவது என்பது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சி.பி.எஸ்.இ. 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதராக குடுமி வைத்து விபூதி பூசப்பட்டவராக வரையப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Last Updated :Feb 21, 2021, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.