ETV Bharat / city

நீட் பயிற்சி நிறுவனங்களில சோதனை: ரூ.180 கோடி கண்டுப்பிடிப்பு!

author img

By

Published : Oct 13, 2019, 7:06 PM IST

சென்னை: நாமக்கல், கரூர், உள்ளிட்ட 17 இடங்களில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் நடந்த வருமான வரித்துறை சோதணையில கணக்கில் வராத ரூ. 180 கோடி கண்டறிப்பட்டுள்ளது.

income tax raid

நாமக்கல், கரூர், சென்னை உள்ளிட்ட 17 நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாணவர்களிடம் ரூ.180 கோடி வரை பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்த அலுவலர்கள் மீதமுள்ள ரூ.150 கோடி குறித்த விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த 180 கோடியில், ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து மேலும் ரூ.150 கோடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வருமானவரித் துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அதில் குறிப்பாக நீட் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டது.

நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் உள்ள தொழில், கட்டுமானம், கல்வி நிலையங்கள் அதன் உரிமையாளர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும், முறைகேடாகவும் கட்டணங்கள் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோரிடம் கொடுக்கும் போது ஒரு ரசீதும், பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான ரசீதுகளும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக அளித்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

மேலும் இந்த முறைகேடுகளுக்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் வருமானவரித் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: நீட் பயிற்சி மையங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.10.19

மாணவர்களிடம் முறைகேடாக வாசூலித்த 180 கோடிகள்; 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து நடந்துவரும் வருமானவரிச் சோதனை.. கலக்கத்தில் நாமக்கல் கல்வி நிறுவனங்கள்..

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் நடந்து வரும் வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11.10.19 ம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் மேற்படி தொழில், கட்டுமானம்,கல்வி நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர் தொடர்பான வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

வருமான வரித்துறைக்கு, பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும், முறைகேடாகவும் கட்டணங்கள் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோர்களிடம் கொடுக்கும் போது ஒரு பில்லும், பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான பில்களும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் பள்ளியின் ஊழியர்கள், மற்றும் பள்ளி வளாகங்கள் என கணக்கில் வராத சுமார் 30 கோடிகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பினாமிகள், பல்வேறு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியவை மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிகவை என கணக்கில் காட்டப்பட்டு சுமார் 150 கோடிகள் வரை உள்ளது குறித்தும் வருமானவரித் துறையின் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..

tn_che_04_income_tax_seized_30cr_at_namakkal_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.