ETV Bharat / city

வெள்ளம், பேரிடரை எதிர்கொள்ள பிரிட்டனுடன் பயிற்சி முகாம் - அமைச்சர் உதயகுமார்.

author img

By

Published : Sep 25, 2019, 6:12 PM IST

Udhayakumar on Tamilnadu flood prevention, calamity management

சென்னை: வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பேரிடர்களை எதிர்கொள்வது குறித்தும் பிரிட்டன் அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி முகாம் நடத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பேரிடர்களை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதன் ஒரு கட்டமாக இன்று, பிரிட்டன் அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி முகாம் நடத்தியுள்ளதாக, தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Minister Udhayakumar on calamity, Flood prevention

மேலும் வடகிழக்குப் பருவ மழையைப் பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மழைநீரை சேகரிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ளத்தின்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவது, உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்வது, தண்ணீரை வெளியேற்றுவது, மக்களை மீட்பது, நோய்களைக் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், கடலோர மாவட்டங்களில் இந்த வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மக்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வுத் தேவை என்றும், மக்களும் அரசுடன் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே அரசின் நடவடிக்கைகள் வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுத் தயார் நிலையில் இருக்கிறது. தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த பருவமழைக் காலங்களில் சென்னையில் 2,000க்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், இந்த வருடம் வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 200 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நவீன இயந்திரங்கள் கொண்டு குப்பைகளை அகற்றுவது, தண்ணீரை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றார்.

இதையும் படிங்க:

திற்பரப்பு அருவியில் வெள்ளம்... சோகத்தோடு திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

Intro:Body:https://we.tl/t-k5K3gDLcDr

பேரிடர்களை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இன்று பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி முகாம் நடைபெற்றதாக
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழையை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும்,மழை நீரை சேகரிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும் அப்போது தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுவது, உணவு மாற்று மருத்துவ பொருடகளை கையிருப்பில் வைத்துகொள்வது,தண்ணீரை வெளியேற்றுவது,மக்களை மீட்பது,நோய்களை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர்

மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை என்றும் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே அரசின் நடவடிக்கைகள் வெற்றி அடையும் என்று தெரிவித்தார் மேலும் ஏரி குளங்கள் தூர் வாரி தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொடுள்ளதாக கூறினார்.

கடந்த காலங்களில் சென்னையில் 2000 க்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் வெள்ள தனிப்பு நடவடிக்கைகள் காரணமாக கூடுதலான நீதி ஒதுக்கி தற்போது 200 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அதேபோல் நவீன இயந்திரங்கள் கொண்டு குப்பைகள் அகற்றுவது,தண்ணீரை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருப்பதாக அப்போது தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.