20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Nov 3, 2021, 7:43 AM IST

Updated : Nov 3, 2021, 8:05 AM IST

பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாகத் 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகக் கனமழை பெய்து வருவதால், இன்று (நவ.3) 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேலூர்,ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஜயராணி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல மாவட்டங்களில் மூன்றாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளிப் பண்டிகை நேரத்தில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவா குலாப்ஜாமுன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா..!

Last Updated :Nov 3, 2021, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.