தொடர் மழை: 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Nov 10, 2021, 7:49 AM IST

Updated : Nov 10, 2021, 9:01 AM IST

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 12 மாவட்டங்களுக்குக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, சேலம், திண்டுக்கல், விருதுநகர், தேனி, ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதில், திருப்பூர், கோவை, திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated :Nov 10, 2021, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.