ETV Bharat / city

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் ... உயர் நீதிமன்றத்தில் விசாரணை

author img

By

Published : Sep 29, 2022, 12:50 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. இதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு, தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறி ஆர் எஸ் எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர்எஸ்எஸ்தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த (செப்.22) ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்.

மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அணிவகுப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலாக தமிழ்நாடு அரசு நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினார். ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

வழக்கை தாக்கல் செய்து எண்ணிடும் நடைமுறைகள் முடிந்தால் நாளை (செப் 29) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.