ETV Bharat / city

சென்னையில் நாளை பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்

author img

By

Published : Aug 12, 2022, 5:30 PM IST

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு சென்னையில் 19 மண்டலங்களிலும் நாளை மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது

food
food

சென்னை: தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

அதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுகளைப்பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். நியாய விலைக்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டப்புகார்களை இந்த முகாமில் தெரிக்கலாம் என்றும், மக்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 19 மண்டலங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உப்பளத்தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத்தொகை திட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.