அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை!

author img

By

Published : Sep 28, 2022, 9:22 AM IST

பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை!

அரிவாளால் வெட்ட வந்த தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

சென்னை: தாம்பரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவன் மீது சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள் இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தாம்பரம் சாய்ராம் கல்லூரி அருகே உள்ள காட்டு பகுதியில் சச்சின் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் காட்டுப் பகுதியில் சச்சினை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சச்சின் காவல்துறையினரை அரிவாளால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அவனை முழங்காலுக்கு கீழே இரண்டு முறை சுட்டு பிடித்தனர்.

காலில் குண்டு பாய்ந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சச்சின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.