கோடநாடு கொலை வழக்கு - தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

author img

By

Published : Oct 28, 2021, 6:54 PM IST

கோடநாடு கொலை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனபாலை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோடநாடு சதி திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கனகராஜ் சாலை விபத்தில் இறந்தபோது அவருடைய செல்ஃபோன் பதிவுகளை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர்களை கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

இருவருக்கும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதையடுத்து கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்நிலையில் தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் (அக்.26) தனிப்படை காவல் துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து தனபால் மட்டும் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இருவர் அதிரடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.