பரபரப்பான அரசியல் சூழல்: டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம்

author img

By

Published : Jun 23, 2022, 10:10 PM IST

டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சற்றுமுன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 24 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக கூறியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் நாளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணிக் கட்சி சார்பாக திரௌபதி முர்மு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதற்காக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து 9 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம்

மேலும் டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதனைதொடர்ந்து பொதுக்குழுவில் நடந்தவை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தரப்பில் விமான டிக்கெட் எதுவும் பதிவு செய்யபடவில்லை. ஆனால் இன்று டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: கோவை, தேனியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுகவினர் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.