ETV Bharat / city

நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: மாணவர்களின் கைரேகையை சோதனை செய்ய முடிவு!

author img

By

Published : Oct 14, 2019, 10:45 PM IST

சென்னை: நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியால் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் கைரேகையை சோதனை செய்ய மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு

நடப்பாண்டில் தமிழ்நாட்டிலுள்ள 39 மருத்துவக்கல்லூரியிலிருந்த ஐந்தாயிரத்து 400 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 580 இடங்கள் தவிர நான்காயிரத்து 820 இடங்களும்19 பல் மருத்துவக் கல்லூரியில் இரண்டாயிரத்து 913 இடங்களும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்பப்பட்டது. இதனிடையில் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய சோதனையில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பயின்ற இர்பான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தற்போது ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடி நாளுக்குநாள் நீண்டுகொண்டு வரும் சூழலில், அரசு நடத்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு மூலம், கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

நீட் பயிற்சி நிறுவனங்களில சோதனை: ரூ.180 கோடி கண்டுப்பிடிப்பு!

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வின்போது மாணவரின் பெயர், தாய் தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், புகைப்படம் போன்றவை பெறப்பட்டன. நீட் தேர்வுக்கான தேர்வுக்குக் கூட, நுழைவுச்சீட்டு புகைப்படத்துடன் தேசிய தகுதித் தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு மையங்களுக்கும் மாணவர்கள் செல்வதற்கு முன்னர் கடுமையாகச் சோதனை செய்த பின்னரே தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களின் கைரேகை பெறப்பட்ட பின்னர், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் சோதனை எளிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது!

நீட் தேர்வில் ஒரே மாணவரின் பெயர், தந்தை, தாய் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் மூன்று முதல் நான்கு இடங்களில் வெவ்வேறு நபர்கள் தேர்வினை எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவக் கல்வி இயக்ககம் தேசிய தகுதித் தேர்வு முகமையிடம் மாணவர்களின் கைரேகை விவரங்களை அளிக்க வேண்டுமெனக் கடிதம் எழுதியுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு

அதனை ஏற்றுத் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களும், பிற மாநிலங்களில் தேர்வெழுதி தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களையும், தேசிய தகுதித் தேர்வு முகமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் கைரேகை விவரங்களை பெற்றபின்னரே, அதனை மின்னிலக்க முறையில் நகலெடுத்து, காவல் துறையின் கைரேகைப் பிரிவின் உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கைரேகைகள் ஒப்பிட்டுப் பார்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மருத்துவக் கல்வி இயக்ககம் விரைந்து மேற்கொண்டுவருகிறது.

நீட் முறைகேடு: இர்பான் கல்லூரியிலிருந்து நீக்கம்!

கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாணவரின் கைரேகையில் வேறுபாடு காணப்பட்டால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய, தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் கண்டறிய வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

Intro:நீட் தேர்வு முறைகேடு எதிரொலி
மருத்துவ மாணவர்கள் கைரேகை சோதனை செய்ய முடிவு


Body:சென்னை,

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியால் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் கைரேகையை சோதனை செய்ய மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவ படிப்பில் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவால் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தலாம் என முதலில் ஆலோசனை செய்ய தமிழக அரசு, சான்றிதழ் சரிபார்ப்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளால் அதனை செயல்படுத்தவில்லை.
அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. மாணவர்களின் சான்றிதழ்கள் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவால் நேரடியாக சரி பார்க்கப்பட்ட பின்னர் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழகத்திலுள்ள 39 மருத்துவக்கல்லூரியில் இருந்த 5400 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 580 இடங்கள் தவிர 4820 இடங்களும்,19 பல் மருத்துவ கல்லூரியில் 2913 இடங்களும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட்டது.

இந்தநிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய சோதனையில் தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பயின்ற இப்ரான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் தற்பொழுது 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு மோசடி நாளுக்குநாள் நீண்டு கொண்டு வரும் சூழ்நிலையில், அரசு நடத்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வின்போது மாணவரின் பெயர் ,தாய், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், புகைப்படம் போன்றவை பெறப்பட்டன.
நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு புகைப்படத்துடன் தேசிய தகுதித் தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு மையங்களுக்கும் மாணவர்கள் செல்வதற்கு முன்னர் கடுமையாக சோதனை செய்த பின்னரே தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களின் கைரேகை பெறப்பட்ட பின்னர் தேவர் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் பிற மாநிலங்களில் சோதனை எளிதாக இருந்ததாக தெரியவந்துள்ளது.


நீட் தேர்வில் ஒரே மாணவரின் பெயர், தந்தை,தாய் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களுடன் மூன்று முதல் நான்கு இடங்களில் வெவ்வேறு நபர்கள் தேர்வினை எழுதியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவக் கல்வி இயக்ககம் தேசிய தகுதி தேர்வு முகமையிடம் மாணவர்களின் கைரேகை மற்றும் விவரங்களை அளிக்க வேண்டுமென கடிதம் எழுதியுள்ளது.
அதனை ஏற்று தமிழகத்திலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களும், பிற மாநிலங்களில் தேர்வெழுதி தமிழக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களையும் தேசிய தகுதி தேர்வு முகமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் கைரேகை விபரங்களை பெற்றபின்னர் அதனை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து, காவல்துறையின் கைரேகை பிரிவின் உதவியுடன் தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கைரேகைகள் ஒப்பிட்டு பார்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணிகளை மருத்துவ கல்வி இயக்ககம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. கைரேகை ஒப்பிட்டு பார்க்கும்போது மாணவரின் கைரேகையில் வேறுபாடு காணப்பட்டால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய தமிழக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் கண்டறியப் வாய்ப்புள்ளதாக மருத்துவ கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.