ETV Bharat / city

"ஓடி ஒளிவது ப.சிதம்பரம் போன்றவர்களுக்கு நல்லதல்ல" - அமைச்சர் ஜெயக்குமார் கண்டிப்பு!

author img

By

Published : Aug 21, 2019, 6:44 PM IST

Updated : Aug 21, 2019, 7:57 PM IST

சென்னை: ப.சிதம்பரம் போன்ற முக்கியத் தலைவர்கள் வழக்கை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளிவது நல்லதல்ல என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஜெயக்குமார்

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஒருநாள் ஊக்கமளிக்கும் முகாம் சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ப. சிதம்பரம் வீட்டில் நடைபெறுவது நீதிமன்றம் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. டெல்லி நீதிமன்றம் தனது கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் எனக்கூறியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து, ப.சிதம்பரம் போன்ற முக்கியத் தலைவர்கள் எந்த வழக்காக இருந்தாலும் குற்றமற்றவர் என தானாக முன்வந்து எதிகொள்ள வேண்டுமே தவிர, ஓடி ஒளிவது நல்லதல்ல எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

மேலும், முதலமைச்சர் பழனிசாமி மாநிலத்தின் வளர்ச்சிப் பணிக்காக மட்டுமே வெளிநாடு செல்கிறார் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியவில்லை என்று விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டதால் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார் என்றும் கூறினார்.

Intro:பா சிதம்பரம் ஓடி ஒளிய கூடாது
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


Body:சென்னை,


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 4 பணிக்கான ஊக்க முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த முகாமினை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பயிற்சி கையேட்டினை தேர்வர்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தேர்வர்கள் நன்றாக தங்களை தயார் செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
மேலும் வந்திருந்த சிறுவர்களிடம் சில விழாக்களை கேட்டு சரியாக பதிலளிக்க தேர்வர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர் .அவர்களுக்கு ஒருநாள் ஊக்க முகாம் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசு வரலாற்றில் இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்விற்கு ஒரு துறை பயிற்சி அளித்து கிடையாது. முதல் முறையாக பயிற்சி அளிக்கபடுகிறது.

பா சிதம்பரம் வீட்டில் நடைபெறும் சோதனை என்பது ஒரு நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையாகும். மேலும் நீதிமன்றம் தனது கருத்தினை கடுமையாக தெரிவித்துள்ளது. அந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என கூறியுள்ளது. நீதிமன்ற கருத்தின் அடிப்படையில் மத்திய அரசின் சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த வழக்காக இருந்தாலும் எதிர்கொள்ளவேண்டும் ஓடி வழிவதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. எனவே அவர் வழக்கினை எதிர் கொள்வது தான் நல்லது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார் சிதம்பரம் பூமியில் இருப்பது பூமிக்கு பாரம் எனக் கூறியதன் அடிப்படையில் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என கேட்டதற்கு, காக்கா உட்கார பனபழம் விழுந்த கதையாக இதற்கும் அதற்கும் முடிச்சு போடக்கூடாது.
தேர்தலின்போது பா சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் அண்ணா திமுக ஆட்சியை கலைப்போம் என கூறினார. ஆனால் நாங்கள் காங்கிரஸ் ஆட்சி அமையாது எனவும் ,ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அன்றே திருப்பி கூறினோம். ஆனால்அவருக்கு இன்று வந்துள்ள நிலைமை பரிதாபமாக உள்ளது. வழக்கில் எதிர்கொள்ளாமல் ஓடி ஒழிவது என்பது இவ்வளவு பெரிய தலைவர்கள் நல்லது இல்லை என்பதுதான் எனது கருத்து.

முதல்வர் வளர்ச்சிப் பணிக்காக தான் வெளிநாடு செல்கிறார். திமுக நாடாளுமன்ற தேர்தலை எடுத்து மாற்றம் எடுக்கப்படும் என ஸ்டாலின் எண்ணினார் அது நடக்கவில்லை என்பதால் இதுபோன்ற பேசுகின்றனர்.

துண்டுச்சீட்டு வாரத்தில் தனிமனிதனை தாக்கிப் பேசுவது நல்லதல்ல. தனிமனித தாக்குதலை முதலில் ஆரம்பித்தவர் மு க ஸ்டாலின் தான். அவரது தந்தை கருணாநிதிக்கும் இலைமறை காயாக தான் கருத்து கூறுவார். ஆனால் ஸ்டாலின் நேரடியாக சூடு இருக்கிறதா? சொரணை இருக்கிறதா? என கேள்வி எழுப்புகிறார். ஸ்டாலின் நாவினை அடக்கிக் கொண்டு பேச வேண்டும்.



அதேபோல் வி.பி. துரைசாமியும் அவரை போல் பேசுகிறார். மோசமான வார்த்தைகளை பேசுவதில் வல்லவர்கள் என்பதை மேடை போட்டு பேசினாலும் அதில் நான் தான் வெற்றி பெறுவேன்.
தனிமனித தாக்குதலை ஆரம்பித்து வைத்தது திமுக. அதனை அவர்கள் முடிக்க வேண்டும் அவ்வாறு முடிக்காவிட்டால் எங்களுடைய விமர்சனம் தொடரும் என தெரிவித்தார்.
பா சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுவதற்கும் மத்திய அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே இதுபோன்ற சோதனை நடைபெறுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்த போது அதனை நேரடியாக எதிர் கொண்டவர் ஜெயலலிதா.
சிதம்பரம் வழக்கு பயந்து ஓடி ஒளியாமல் அதனை எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

















Conclusion:
Last Updated :Aug 21, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.