ETV Bharat / city

கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் சி.வி கணேசன்!

author img

By

Published : Jan 20, 2022, 8:21 PM IST

தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் பணியின்போது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சி.வி. கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

பணிநியமனம்
பணிநியமனம்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் தொழிலாளர் நல ஆணையம் இயங்கிவருகிறது.

இந்த ஆணையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, பணியின் போது மரணமடைந்த 8 ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று (ஜன.20) வழங்கினார்.
அப்போது தொழிலாளர் நலன் மாற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஆர். கிர்லோஷ்குமார்
தொழிலாளர் ஆணையர் டாக்டர். அதுல் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: TN urban local body polls 2022: புதுக்கோட்டை நகராட்சித் தலைவிக்கு காத்திருக்கும் சவால்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.