ETV Bharat / city

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் கைது

author img

By

Published : Aug 4, 2021, 6:05 PM IST

சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் கைது
தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் கைது

சென்னை: காசிமேட்டில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நேற்று (ஆகஸ்ட் 03) மாலை நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கத்தியால் அங்கிருந்த கண்ணாடியை உடைத்து, பொருள்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார்.

பொய்யான தகவல்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்நபர் கோயம்புத்தூர் மாவட்டம் உப்பளிபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தன் மீது பொய்யான செய்திகளை இந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்ததன் காரணமாக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினார்.

காவல் துறை விசாரணை

இதனால், ஆத்திரமடைந்து கடந்த 1ஆம் தேதியன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு காரிலே வந்து, தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் ராயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை வெறி தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது குண்டாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.