ETV Bharat / city

2020-21பங்கு ஈவுத் தொகை ரூ.155 கோடி - முதலமைச்சரிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By

Published : Oct 28, 2021, 7:30 PM IST

மேலாண்மை இயக்குநர்
மேலாண்மை இயக்குநர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், 2020-21ஆம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை ( டிட்கோ ) சார்பில் ரூ.155 கோடி வழங்கப்பட்டது.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

அப்போது, “தமிழ்நாடு அரசுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் ( டிட்கோ ) சார்பில் 77 கோடியே 93 இலட்சத்து 33 ஆயிரத்து 18 ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் ( சிப்காட் ) சார்பில் இடைக்கால ஈவுத் தொகையாக 70 கோடி ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் 7 கோடியே 33 இலட்சத்து 34 ஆயிரத்து 700 ரூபாய்க்கான வங்கி வரைவோலையையும் வழங்கினார்.

இதன் மொத்த மதிப்பு 155 கோடியே 26 இலட்சத்து 67 ஆயிரத்து 718 ஆகும்.

இந்நிகழ்வின்போது , தொழில் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ( பொறுப்பு ) நா . முருகானந்தம் , தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் த ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:போதைப் பொருள் வழக்கு: ஆர்யன் கானுக்கு ஜாமீன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.