ETV Bharat / city

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க உதவிய கார் டயர்

author img

By

Published : Jan 7, 2022, 12:26 PM IST

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க உதவிய கார் டயர்
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க உதவிய கார் டயர்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்ற கார் டயரை வைத்து அவரை தனிப்படை கைது செய்தது தெரியவந்த்துள்ளது.

சென்னை: வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜியைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி சென்ற காரின் டயரில் வீல் கேப் பொருத்தப்படாததை வைத்துத் துப்பு துலக்கியதாக காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த 20 நாட்களாக ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக பிரமுகரான ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான 3 காரை பயன்படுத்தித் தப்பிப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் தெரியவந்தது.

பயன்படுத்தப்பட்ட பாஜக பிரமுகரின் கார்

மேலும் ஓசூரிலிருந்து கார் மூலமாக ராஜேந்திர பாலாஜி கர்நாடகா தப்பிச்செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் தர்மபுரி காவல்துறையிடம் உதவியை நாடியுள்ளனர். தர்மபுரி காவல்துறை தனிப்படை அமைத்து மூன்று நாட்களாக 250 கிமீ வரை தீவிரமாகத் தேடி உள்ளனர்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தப்பிச் செல்லும் காரின் பின்புற டயர் ஒன்றில் வீல் கேப் இல்லாததை வைத்துத் துப்பு துலக்கிய தனிப்படை காவல்துறை கர்நாடகா ஹாசன் பகுதியில் சுற்றி வளைத்து ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவை 3ஆம் நாள் அமர்வு நேரலை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.