சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு... குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் மனு!

author img

By

Published : Jun 13, 2022, 10:48 PM IST

hemnath

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவுக்கு, சித்ராவின் தந்தை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக்கோரி ஹேம் நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் பொறியாளர்கள்தான் பொறுப்பு: சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.