ETV Bharat / city

ஊரடங்கு மீறல்: சுமார் 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

author img

By

Published : Jul 16, 2020, 4:40 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாகக் கூறி இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 469 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

114 நாள்கள்: ரூ. 18 கோடியை கடந்த அபராதம்
114 நாள்கள்: ரூ. 18 கோடியை கடந்த அபராதம்

கரோனா பரவாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. உத்தரவை மீறியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 114 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 8 லட்சத்து 60 ஆயிரத்து 110 பேரைக் கைதுசெய்து, பிணையில் விடுவித்துள்ளது. மேலும், 6 லட்சத்து 37 ஆயிரத்து 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 18 கோடியே 13 லட்சத்து 89 ஆயிரத்து 771 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க; உதவி கேட்டவரிடம் ரூ.50 ஆயிரம் ஆட்டைய போட்ட ஏடிஎம் திருடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.