ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 37 பேருக்கு கரோனா

author img

By

Published : May 4, 2022, 10:47 PM IST

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 37 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மே 4ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 15 ஆயிரத்து 811 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இருந்த 37 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 201 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை: இதனால், தமிழ்நாட்டில் 34 லட்சத்து 54 ஆயிரத்து 95 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 467 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 58 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 603 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாகப் பாதிப்பு: மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 23 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 6 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் மூன்று நபர்களுக்கும் திருவள்ளூரில் இரண்டு நபர்களுக்கும், திருப்பத்தூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 0.3% என உள்ளது. செங்கல்பட்டில் அதிகபட்சமாக 1.7% பேருக்கும் சென்னையில் அதிகபட்சமாக 1.2 சதவீதம் பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 47 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.