ETV Bharat / city

கடந்த 12 நாள்களில் 135% அதிகரித்த கரோனா!

author img

By

Published : Mar 25, 2021, 6:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கடந்த 12 நாள்களில் கரோனா 135% உயர்ந்துள்ளது எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று 695 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று (மார்ச் 24) மட்டும் புதிதாக 1,636 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை
கடந்த 12 நாள்களில் 135% அதிகரித்த கரோனா

மேலும் கடந்த 12 நாள்களில் கரோனா 135% உயர்ந்துள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 12 நாள்களில் (மார்ச் 13 முதல் மார்ச் 24) கரோனா நோய்த் தொற்று பாதிப்பு விவரம்:

மார்ச் 13 - 695

மார்ச் 14 - 759

மார்ச் 15 - 836

மார்ச் 16 - 867

மார்ச் 17 - 945

மார்ச் 18 - 989

மார்ச் 19 - 1,087

மார்ச் 20 - 1,243

மார்ச் 21 - 1,289

மார்ச் 22 - 1,385

மார்ச் 23 - 1,437

மார்ச் 24 - 1,636

தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் ஆகியவற்றை பின்பற்றவேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.