ETV Bharat / city

நயன்- விக்கி மீது போலீசில் புகார்..! தவறான முன்னுதாரணம் என குற்றச்சாட்டு...

author img

By

Published : Oct 15, 2022, 4:08 PM IST

Updated : Oct 15, 2022, 4:40 PM IST

அரசு விதிமுறைகளை மீறி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நயன் விக்கி மீது போலீசில் புகார்
நயன் விக்கி மீது போலீசில் புகார்

சென்னை: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில், நடிகை நயன்தாரா மற்றும் விஷ்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அரசு விதிமுறைகளை மீறி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இது இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உடனடியாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், வாடகை தாய் ஆகியோரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் அளித்த பேட்டி

இதையும் படிங்க: நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார்

Last Updated :Oct 15, 2022, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.