திருச்சி காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி

author img

By

Published : Nov 24, 2021, 12:42 PM IST

Updated : Nov 24, 2021, 6:21 PM IST

₹1கோடி நிதியினை முதல்வர் வழங்கினார்

வீரமரணம் அடைந்த திருச்சி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: இரவு ரோந்துப் பணியில் திருடர்களைப் பிடித்தபோது, தாக்குதலுக்குள்ளாகி வீரமரணம் அடைந்த திருச்சி நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பூமிநாதனின் மனைவி கவிதா, மகன் குகன் பிரசாத் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நிதி உதவியைப் பெற்றுக்கொண்டனர்.

திருச்சி காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி

பின்னர், செய்தியாளரைச் சந்தித்த குகன் பிரசாத் கூறியதாவது, “முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார், மேலும் விரைவில் பணி நியமன ஆணையை வழங்குவதாக உறுதியளித்தார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Cylinder Blast: சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் - முதலமைச்சர்

Last Updated :Nov 24, 2021, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.