ETV Bharat / city

ஆழியாறு அணையை திறக்க முதலமைச்சர் ஆணை!

author img

By

Published : Jun 5, 2020, 3:18 PM IST

dam
dam

சென்னை: ஆனைமலை வட்டத்திலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு 7.6.2020 முதல் 31.10.2020 முடிய 146 நாட்களுக்கு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தை பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1,156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், உழவர்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மங்காத்தா சூதாட்டம்' போடும் அதிமுக அரசு - ஸ்டாலின் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.