ETV Bharat / city

கல்லூரியில் சீட் கிடைக்காத விரக்தி.. சென்னையில் பள்ளி மாணவன் தற்கொலை

author img

By

Published : Sep 2, 2022, 7:34 PM IST

Etv Bharat
Etv Bharat

கல்லூரியில் சீட் கிடைக்காததால் பல்லாவரம் அருகே மன உளைச்சலான பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை திருமங்கை ஆழ்வார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது 18 வயது மகன் மணிகண்டன். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பின்னர் மறு தேர்வு எழுதி வெற்றிபெற்றுள்ளார்.

பின்பு கல்லூரியில் சேர்வதற்காக சில கல்லூரிகளில சீட் கேட்டும் கிடைக்காததால் மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தன்னுடன் 12ஆம் வகுப்பு படித்த, சக நண்பர்களுக்கு கல்லூரியில் சீட் கிடைத்ததால், மன உளைச்சலில் இருந்த மாணவன் இன்று (செப்.2) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெகுநேரமாக பெற்றோர் கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, மாணவர் தற்கொலை செய்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.