ETV Bharat / city

அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்

author img

By

Published : Mar 15, 2022, 3:42 PM IST

அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்
அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: இன்றுமுதல் நாளை மறுநாள்வரை (மார்ச் 17) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

மார்ச் 15, 16

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ்வரை அதிகமாக இருக்கக்கூடும்.

மார்ச் 18, 19

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க: 'இந்தியாவில் புதிதாக 2,568 பேருக்கு கோவிட் பாதிப்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.