ETV Bharat / city

கரோனா பாதித்த தெருக்கள்.. சென்னையில் 6 தெருக்களில் எச்சரிக்கை..

author img

By

Published : Jun 15, 2022, 6:40 PM IST

சென்னையில் ஆறு தெருக்களில் 5 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 5க்கும் மேற்பட்ட கரோனோ பாதிப்புகள் உள்ள தெருக்கள் 6 ஆக அதிகரிப்பு
சென்னையில் 5க்கும் மேற்பட்ட கரோனோ பாதிப்புகள் உள்ள தெருக்கள் 6 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் 5க்கும் மேற்பட்ட கரோனோ பாதிப்புகள் உள்ள தெருக்கள் 6 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 3க்கும் கீழான பாதிப்பு 497 தெருக்கள் உள்ளது. கடந்த சில தினங்களாகவே சென்னையில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 39,537 தெருக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 543 தெருக்களில், 781 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 684 பேர் வீட்டு தனிமைபடுத்துதலில் உள்ளனர்.

இதில் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட வீடுகளாக 516 வீடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 5க்கும் மேற்பட்ட கரோனோ பாதிப்புகள் உள்ள தெருக்கள் ஆக 6 தெருக்களும் , 4க்கும் மேல் தொற்றுள்ள 15தெருக்கள் , 3க்கும் மேல் தொற்றுள்ள 46 தெருக்கள் , 3க்கும் கீழ் தொற்றுள்ள 497 தெருக்கள் அடையாம் காணப்பட்டுள்ளன காணப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் அடையாறு தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் தொற்றுப பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.சென்னை மாநகரில் தற்போது 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 99.72 % முதல் தவணைத் தடுப்பூசியும் , 85.51 % இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு 87.30 % முதல் தவனை தடுப்பூசியும் , 66.64% இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 43.84 % முதல் தவணைத் தடுப்பூசியும் 20.9% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 1.74 லட்சம் பேர் சென்னையில் செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 332 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.