ETV Bharat / city

புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் தேங்கிய மழைநீர்!

author img

By

Published : Dec 4, 2020, 11:05 AM IST

புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால், சென்னையில் தேங்கும் மழை நீர்!
புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால், சென்னையில் தேங்கும் மழை நீர்!

சென்னை: புரெவி புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

புரெவி புயல் காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளில் இரு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

நேற்றிரவு (டிச. 03) முதல் இன்று (டிச. 04) காலை வரை தொடர்ந்து மழை பெய்துவருவதால் தாம்பரம், வரதராஜபுரம், ராயப்பா நகர், முடிச்சூர் ஆகிய தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளன.

வெளுத்து வாங்கும் மழையால், சென்னையில் தேங்கும் மழைநீர்

இதனால், மழைநீர் வீட்டுக்குள் வந்துவிடும் எனப் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இதையும் படிங்க...கனமழை: காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.