ETV Bharat / city

தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Oct 5, 2021, 3:30 PM IST

bank holidays
bank holidays

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக். 6, 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதனால் 9 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அக். 6, 9ஆம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, பள்ளி, கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.