ETV Bharat / city

கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு

author img

By

Published : Nov 6, 2020, 3:04 PM IST

கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

800 Computer Teachers Promoted  Computer Teachers Promoted  Computer Teachers  கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு  கணிணி ஆசிரியர்கள் பதவி உயர்வு  பள்ளிக் கல்வித் துறை
800 Computer Teachers Promoted Computer Teachers Promoted Computer Teachers கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு கணிணி ஆசிரியர்கள் பதவி உயர்வு பள்ளிக் கல்வித் துறை

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசு ஆணையில், “தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் விதிகளின் படி குறைந்தப்பட்ச கல்வித் தகுதி பெற்றவர்களை கணிணி ஆசிரியர் நிலை 2இல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு கணிணி ஆசிரியர் நிலை 1 என பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறையில் கணிணி ஆசிரியர்கள் நிலை 2இல் பணியாற்றி வரும் 800 கணிணி ஆசிரியர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி கணிணி ஆசிரியர் நிலை 1 என தரம் உயர்த்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.