ETV Bharat / city

சகோதரியின் 70 லட்சத்தை சுருட்டிய தங்கை..! - காவல் ஆணையரிடம் புகார்

author img

By

Published : Oct 21, 2019, 9:35 AM IST

Indian high commission Kuala Lumpur secretary 70laks swindled 70 லட்சம் ரூபாய் மோசடி காவல் ஆணையரிடம் புகார்

சென்னை: மலேசியாவிற்கான முன்னாள் இந்திய தூதரக செயலாளரிடம், அவரது தங்கை 70 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தூதரக அலுவலகச் செயலாளராக மலேசியாவில் பணியாற்றிய மல்லிகா சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'நான் மலேசியாவில் வசித்து வருகிறேன். கோவையில் எனது வீடு உள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எனது தங்கை சாந்தா, கனரா வங்கியில் எழுத்தராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 40 ஆண்டுகளாக எனது வங்கிக் கணக்கில் மோசடி செய்து என் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை என் தங்கை அபகரித்துள்ளார். இவ்வளவு காலமாக இந்த மோசடி குறித்து எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

தற்போது எனது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தபோது, சுமார் 70 லட்சம் ரூபாய் வரை, எனது பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து மோசடி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக என் தங்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் புகார் கொடுத்துள்ளேன்.

முன்னாள் இந்திய தூதரக செயலாளர் மல்லிகா பேட்டி

அவரும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். என் பெயரில் 19 லட்சம் வங்கிக் கடன் வாங்கியது, எனது பெட்டகத்திலிருந்து நகைகளை எடுத்தது என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட எனது தங்கை மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க...கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பே நிலுவைத் தொகை!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 20.10.19

மலேசியாவிற்கான முன்னாள் இந்திய ஹைகமிசன் செயலாளரிடம் 70 லட்சம் மோசடி.. நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் புகார்..

நான் இந்திய ஹைகமிசனர் அலுவலகச் செயலாளராக மலேசிய கோலாலம்பூரில் பணியாற்றிய மல்லிகா சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தற்போது நான் மாலேசியாவில் வசித்து வருகிறேன். தமிழகத்தில் கோவையில் எனது வீடு உள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எனது தங்கை சாந்தா கனராவங்கியில் எழுத்தராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக எனது வங்கிக் கணக்கில் மேசடி செய்து என் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை மோசடி செய்துள்ளார். இவ்வளவு காலமாக இந்த மோசடி குறித்து எனக்கு தெரியாமல் போய்விட்டது. தற்போது எனது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்த போது சுமார் 70 லட்சம் வரை எனது பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து மோசடி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக என் தங்கை மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.. என் பெயரில் 19 லட்சம் லோன் வாங்கியது, எனது லாக்கரிலிருந்து நகைகளை எடுத்தது என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட எனது தங்கை மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார்..


tn_che_02_70laks_swindled_from_Indian_high_commission_kolalambur_secretary_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.