ETV Bharat / city

தீபாவளிக்கு குறைவில்லாமல் பேருந்துகள் - ராஜகண்ணப்பன்

author img

By

Published : Oct 23, 2021, 10:18 PM IST

தீபாவளி சிறப்பு பேருந்து தேவைக்கு ஏற்ப இயக்கப்படும் எனவும், புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

transport minister rajakannapan
transport minister rajakannapan

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆப்ரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அடையார், திருவாண்மியூர் மந்தவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார்நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்த உள்ளோம். இங்கு வணிக வளாகம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவாய் பெருகும் வகையில் கட்டமைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவித்த பின் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் வாரநாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும், திங்கள்கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதன்மூலம் 1,450 கோடி போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பிரச்னை

தொழிலாளர் பிரச்னை குறித்து பேச்சுவா்த்தை நடத்த குழு ஏற்படுத்தப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகத்தில் புதிதாக 6000 ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி போனஸ் குறித்து நிதி துறையோடு ஆலோசிக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கிறது. அரசு பேருந்துகளில் நாள் ஒன்றிற்கு ஒரு கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியம் அரசு வழங்கினாலும், தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

பேருந்து கட்டணம் உயராது

பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கான எண்ணம் இல்லை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிதிதுறையுடன் பேச்சுவார்த்தை குழு போடப்பட்டு , விரைவில் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்வதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. வெளிப்படையான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

இதில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்படும். ஆவினில் பொருட்களை வாங்கலாம் என்றாலும், அதைவிட குறைவாக விலையில் தரமான பொருட்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு நிதி சேமிப்பு உண்டாகும்.

மேலும், தீபாவளி சிறப்பு பேருந்து தேவைக்கு ஏற்ப குறைவில்லாமல் இயக்கப்படும். புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் மேரிக்கு பொன்னாடை அணிவித்து இறையன்பு வாழ்த்து

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆப்ரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அடையார், திருவாண்மியூர் மந்தவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார்நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்த உள்ளோம். இங்கு வணிக வளாகம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவாய் பெருகும் வகையில் கட்டமைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவித்த பின் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் வாரநாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும், திங்கள்கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதன்மூலம் 1,450 கோடி போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பிரச்னை

தொழிலாளர் பிரச்னை குறித்து பேச்சுவா்த்தை நடத்த குழு ஏற்படுத்தப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகத்தில் புதிதாக 6000 ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி போனஸ் குறித்து நிதி துறையோடு ஆலோசிக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கிறது. அரசு பேருந்துகளில் நாள் ஒன்றிற்கு ஒரு கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியம் அரசு வழங்கினாலும், தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

பேருந்து கட்டணம் உயராது

பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கான எண்ணம் இல்லை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிதிதுறையுடன் பேச்சுவார்த்தை குழு போடப்பட்டு , விரைவில் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்வதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. வெளிப்படையான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

இதில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்படும். ஆவினில் பொருட்களை வாங்கலாம் என்றாலும், அதைவிட குறைவாக விலையில் தரமான பொருட்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு நிதி சேமிப்பு உண்டாகும்.

மேலும், தீபாவளி சிறப்பு பேருந்து தேவைக்கு ஏற்ப குறைவில்லாமல் இயக்கப்படும். புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் மேரிக்கு பொன்னாடை அணிவித்து இறையன்பு வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.