ETV Bharat / city

சென்னையில் 5.5 டன் குட்கா பறிமுதல்- மூவர் கைது

author img

By

Published : Oct 23, 2020, 10:38 AM IST

சென்னை: பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5.5 டன் குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக மூவரை கைது செய்தனர்.

சென்னையில் 5.5 டன் குட்கா பறிமுதல்
சென்னையில் 5.5 டன் குட்கா பறிமுதல்

கர்நாடக மாநிலம், பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்கள் கண்டெய்னர் லாரி மூலம் கடத்திவருவதாக மயிலாப்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினரின் தீவிர விசாரணையில், திருவள்ளூர் நயபாக்கம் வழியாக சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் அங்கு வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் விருதுநகரைச் சேர்ந்த முத்துராஜ் (41), விழுப்புரத்தைச் சேர்ந்த சிவராஜ்(26), திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்த்(21) ஆகிய 3 பேரும் குட்காவை கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பயன்படுத்திய மூன்று செல்போன்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, அதில் கடத்திவரப்பட்ட குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ’குட்கா விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’ : அம்பத்தூர் காவல் துணை ஆணையர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.