ETV Bharat / business

சென்செக்ஸ்சிலிருந்து வெளியேறும் டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி பங்குகள்

author img

By

Published : Nov 23, 2019, 11:00 AM IST

stock market

மும்பை: டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி உள்பட மேலும் இரண்டு நிறுவனங்கள் சென்செக்ஸ்சிலிருந்து இருந்து இன்று வெளியேறுவதாக தெரிவித்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 30 மாபெரும் நிறுனங்களை உள்ளடக்கியது. இந்த 30 நிறுவங்களின் செயல்பாட்டை வைத்து தான் அன்றாட பங்குசந்தையில் சென்செக்ஸ்யின் ஏற்ற இறக்கங்களை கணக்கிடமுடியும். இந்நிலையில் சென்செக்ஸ்சில் தற்போது சரிவை சந்தித்து வரும் சில பங்குகளான, டாடா மோட்டார்ஸ் (Tata Motors), யெஸ் வங்கி (Yes Bank), வேதாந்தா (Vedanta) மற்றும் டாடா மோட்டார்ஸ் டிவிஆர் (Tata Motors DVR) இன்று முதல் சென்செக்ஸ்சிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளன.

மேலும் வெளியேறும் நிறுவங்களின் இடங்களுக்கு அல்ட்ராடெக் சிமென்ட் (UltraTech Cement), டைட்டன் கோ லிமிடெட் (Titan Co Limited), நெஸ்லே இந்தியா (Nestle India) உள்ளிட்ட நிறுவனங்கள் வரவுள்ளதாக ஆசியா இன்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த மாற்றங்களால் பங்குசந்தையில் சென்செக்ஸ் உயர வாய்ப்புள்ளதாக பங்குத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்ல ராஜா' - ரெங்கராஜன்

Intro:Body:

Stock market update this week


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.