ETV Bharat / business

நான்கு விழுக்காடுக்கு மேல் உயர்வைச் சந்தித்த டாடா மோட்டார்ஸ் பங்குகள்!

author img

By

Published : Oct 14, 2019, 11:11 AM IST

stock market

மும்பை: இன்றைய பங்குச்சந்தை தொடக்கத்தில் உயர்வைச் சந்தித்த நிலையில், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா போன்ற பங்குகள் உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார முதல் நாளில் தொடங்கிய பங்குச்சந்தையில், மும்பை பங்குச்சந்தை (Bombay Stock Exchange) குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 133 புள்ளிகள் உயர்ந்து 38,208.24க்கும், தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) குறியீட்டு எண் நிஃப்டி (Nifty) 30 புள்ளிகள் உயர்ந்து 11,335.90க்கும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பங்குச்சந்தை தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata motors) பங்குகள் 4 விழுக்காடு உயர்வைச் சந்தித்த நிலையில், பங்கு தரகர்கள்(Stock Brokers) கவனம் டாடா மோட்டார்ஸ் மீது திரும்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வேதாந்தா (Vedanta), டாடா ஸ்டீல் (Tata Steel), டெக் மஹேந்திரா (Tech Mahindra) போன்ற பங்குகள் உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காட்டன் நாப்கின்களைத் தயாரிக்கும் இளம் சுயத் தொழிலாளி!

Intro:Body:

Stock market


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.