ETV Bharat / briefs

திருமணமாகி 7 மாதமே ஆன பெண் தூக்கிட்டுத் தற்கொலை

author img

By

Published : Jun 16, 2020, 9:39 PM IST

திருவள்ளூர்: குடும்ப தகராறு காரணமாக திருமணமாகி ஏழு மாதங்களே ஆன பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Young Women Suicide In Thiruvallur
Young Women Suicide In Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட கவரப்பேட்டை அடுத்த பணப்பாக்கம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கும் சந்திரா என்பவருக்கும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், படுக்கை அறைக்குச் சென்ற சந்தியா வெகுநேரமாக வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பார்த்திபன், கதவை திறந்து பார்த்தபோது சந்திரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை காவல் துறையினர், சந்தியாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கணவன் - மனைவி இருவருக்குமிடையே சில மாதங்களாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சந்தியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நேற்று மறுக்கப்பட்டு இன்று ஏற்கப்பட்ட இ-பாஸ்; நிம்மதியடைந்த மணமகள் குடும்பம்
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.