ETV Bharat / briefs

ராணிப்பேட்டையில் 24 மணி  நேரமும் இயங்கும் சைபர் தனிப்பிரிவு தொடக்கம்

author img

By

Published : Jun 4, 2020, 4:47 AM IST

ராணிப்பேட்டையில் 24*7 இயங்கும் சைபர் தனிப்பிரிவு தொடக்கம்
ராணிப்பேட்டையில் 24*7 இயங்கும் சைபர் தனிப்பிரிவு தொடக்கம்

ராணிப்பேட்டை: 24 மணி நேரமும் இயங்கும் சைபர் தனிப்பிரிவை ராணிப்பேட்டை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தொடங்கி்வைத்தார்.

புதியதாக உருவான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் (24*7) நேரமும் இயங்கக்கூடிய சைபர் குற்றப்பிரிவை, வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வேலூரிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான புகார்கள், வேலூருக்கு அனுப்பப்பட்டு இதுவரையில் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சைபர் குற்றங்களை 24 மணி நேரமும் கவனித்து நடவடிக்கை எடுக்கும் தனிப்பிரிவை வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் சைபர் சம்பந்தமான குற்றங்கள் மீது துரிதமாகவும், விரைவாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஐஜி காமினி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.