ETV Bharat / briefs

ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

author img

By

Published : Jun 2, 2020, 4:26 AM IST

வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூரில் பாமகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூரில் பாமகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பரப்பி வரும் வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அப்போது, “வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், தெற்கு மாவட்ட செயலாளர் அசோக், தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், மகளிர் அணி செயலாளர் பாலசுந்தரி, ஜே.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.