ETV Bharat / briefs

குமரி மாவட்ட உளவுத்துறை சிறப்பு எஸ்.ஐ. கரோனாவால் மரணம்: எஸ்.பி. இரங்கல்!

author img

By

Published : Sep 30, 2020, 11:51 PM IST

Corona affected SI died In Kanniyakumari
Corona affected SI died In Kanniyakumari

கன்னியாகுமரி: கரோனாவுக்கு மாவட்ட உளவுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தற்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு உளவுத் துறை காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48).

இவர், உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் காரோனா தொற்று கண்டறியப்பட்டதன் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்த முதல் காவலர் சுரேஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.