ETV Bharat / briefs

மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு - புதுச்சேரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 1, 2020, 6:06 PM IST

Updated : Jun 1, 2020, 6:28 PM IST

மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு -மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு -மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் கறுப்புக் கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த இரு வாரத்திற்கு முன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

அதில் ஒரு பகுதியாக யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மின்துறை அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில், அமைந்துள்ள தலைமை மின்துறை அலுவலகப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மத்திய அரசின் தனியார் மயமாக்கும் அறிவிப்பைக் கண்டித்து, கறுப்புக் கொடி ஏந்தியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கைப் போராட்டம் நடத்தினர்.

இதில் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்றும்; மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Last Updated :Jun 1, 2020, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.