ETV Bharat / bharat

வழி கேட்ட சிறுமியிடம் அத்துமீறி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்- கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்

author img

By

Published : May 13, 2022, 10:47 PM IST

ராஞ்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி-கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளிகள்
ராஞ்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி-கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளிகள்

ராஞ்சியில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 5 குற்றவாளிகளையும் கையும் களவுமாகப் பிடித்து அப்பகுதி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சிறுமி ஒருவரை அடாவடித்தனமாக, கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது காரில் வந்த சில இளைஞர்களிடம் வழி கேட்டுள்ளார். உடனே, அவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் உட்கார வைத்துள்ளனர். அதன் பிறகு, ஒரு உணவகத்திற்கு வெளியே காரை நிறுத்தி அனைவரும் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளிகள்: இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி அங்கிதா, ராஞ்சியின் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்கு வெளியே காரைப் பார்த்ததும் சந்தேகம் அடைந்துள்ளார். வழக்கமான ரோந்துப் பணியின்போது காரை சோதனை செய்ததில், ஐந்து இளைஞர்கள் ஆட்சேபனைக்குரிய நிலையில் இருப்பதைக் கண்டனர். உள்ளே அமர்ந்திருந்த பெண் அழுது கொண்டிருப்பதையும் பார்த்து நிகழ்ந்ததை உணர்ந்து அனைவரையும் கைது செய்துள்ளார்.

இதையடுத்து விசாரணையில் பிடிபட்ட 5 இளைஞர்களும் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டனர். காரில் கறுப்பு நிறக் கண்ணாடி இருந்ததால் தெறியாது என நினைத்த அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களில் இருவர் பெரிய கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளம் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.